யாழில் தங்கையிடம் சொக்லேட் வாங்கிய மாணவன் மீது தாக்குதல்

யாழில் மாணவ சிறுமி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன்,மாணவியின் அண்ணனால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
13 வயதான குறித்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு மாணவர்களுக்கு சொக்லெட் வழங்கியுள்ளார். அவர் 14வயதுடைய மேற்படி தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கும் சொக்லெட் வழங்கியுள்ளார்.
இதையடுத்தே எதற்காக சொக்லெட்டை வாங்கினாய்? என்று வினவி மாணவியின் 17வயதுடைய அண்ணன் அந்த மாணவன் மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவியின் அண்ணனின் தவறான புரிதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
Related Post

ஜோ பைடனுக்கு கொவிட் தொற்று
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த [...]

பாராளுமன்ற உறுப்பினரின் கார் மீது துப்பாக்கிச் சூடு – களமிறங்கிய சி.ஐ.டி
தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நடத்தப்பட்ட [...]

பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – வெளியான எச்சரிக்கை
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் [...]