இன்று காலை பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு


பாணந்துறை – பின்வத்தை பகுதியில் அதிசொகுசு பிராடோ ரக ஜீப் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சடலமான மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.00 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், உயிரிழந்தவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *