யாழில் எலிக்காய்ச்சலால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் , முன்னதாக பலாலி இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் அங்கிருந்த மேலதிக சிகிச்சைக்காக கடந்த 25ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் 26ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
Related Post

கிளிநொச்சியில் ஓடும் பேருந்தில் துணிகர கொள்ளை
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் [...]

யாழில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 800 ரூபாய்க்கு விற்பனை
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். [...]

யாத்திரை சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து
யாத்திரை சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு [...]