யாழ் நாவற்குழியில் முச்சக்கர வண்டி விபத்து – 2 குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்

யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 குழந்தைகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி 2 குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் தாயாரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் கிளிநொச்சி – பூநகரி – 4ம் கட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக காற்று கட்டுப்பாட்டை இழக்க செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீதியில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானமாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

காலிமுகத்திடலில் இராணுவத்தினர் குவிப்பு – சவேந்திர சில்வாவும் விஜயம்
காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். [...]

வட்டிக்கு வாங்கிய பணத்துக்காக 16 வயதான மகளை விற்ற தந்தை
தன்னுடைய மனைவியையும் இணைத்துக்கொண்டு வீட்டிலேயே நடத்திய சூதாட்டத்தில் விளையாடுவதற்காக, வட்டிக்கு பெற்ற பணத்தை [...]

கொழும்பில் உள்ள இந்திய விசா மையத்திற்கு பூட்டு
பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை [...]