கொழும்பில் 21 வயது மாணவி மாயம் – பதறும் பெற்றோர்

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளார்.
நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறியதுடன் மீண்டும் வீட்டிற்கு வருகைத்தரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் கையடக்க தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் மாணவி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

திருமண நிகழ்வுக்கு சென்ற படகு நீரில் மூழ்கி 21 பேர் பலி
ஏமனின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொடைடா துறைமுக நகர [...]

5 தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதின
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி [...]

மீண்டும் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
ஹம்பாந்தோட்டையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் [...]