யாழில் விடுதி முற்றுகை – இரு பெண்கள் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் (29) மூவர் கைது செய்யப்பட்டனர்.
அந்த விடுதியில் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன .
அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
இதன் போது , உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை பொலிஸார் கைது செய்ததுடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

இளைஞர்களுக்கான முக்கிய எச்சரிக்கை
வெளிநாட்டில் வேலைவாய்பை பெற்று தருவதாக கூறி சுமார் 300 இளைஞர் யுவதிகளிடம் பண [...]

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த உணவகம்
வவுனியா நகரில் உணவகம் ஓன்று திடீரென தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமாகியுள்ளது. வவுனியா [...]

வெடுக்குநாறிமலை விவகாரம் – ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலய பூசகர் உட்பட [...]