இலங்கையில் மீண்டும் பதற்றம்

இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களால் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு முன்பாக தற்போது இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொருளாதார நெருக்கடி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை எதிர்த்தும் நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி குறித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பெருமளவிலான பொலிஸார் கடமைகளுக்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்த்தாரை பிரயோக வண்டியும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

மோட்டார் சைக்கிள் திருடிய இரு இராணுவ சிப்பாய்கள் உட்பட 3 பேர் கைது
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்கள் இருவர் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிவந்த [...]

இரு வீடுகளை தாக்கிய மின்னல் – ஒருவர் காயம்
இரு வீடுகளின் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வீட்டின் மின் கட்டமைப்புகள் [...]

முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் [...]