மேற்கு இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

மேற்கு இந்தோனேசியாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனினும் பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் மையத்தால் ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் கடற்படுக்கையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான நெருப்பு வளையத்தின் மீது இருப்பது காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.