வயதான தாயை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு தப்பியோடிய பாவிகள்

வயதான தாய் ஒருவர் சாலையில் விடப்பட்ட சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இரத்தினபுரி நகரிலுள்ள இடமொன்றில் இடம்பெற்றுள்ளது.
வயதான தாயை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு வீதியொன்றுக்கு அருகில் இறக்கி விட்டதும் முச்சக்கரவண்டியில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், இரத்தினபுரி பொலிசார் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததுடன், தற்போது அவர் கலவானை முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வயதான தாயை வீதியில் விட்டுச் சென்ற நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் இரத்தினபுரி பொலிஸாருக்கு அறிவிக்குமாறு இரத்தினபுரி பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Post

யாழ் போதனாவில் உயிரிழந்த முதியவர் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காண [...]

நோயாளர் காவு வண்டி மோதி 5 வயதுச் சிறுமி உட்பட இருவர் படுகாயம்
சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் கிராம உத்தியோகத்தர் [...]

அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம்
உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம் இன்று [...]