இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகள்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை சம்பாதிப்பதற்காக யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் எப்போதும் இப்படியான அரிசி மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது பிள்ளைகளுக்கு உணவை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கி உள்ளதாகவும் கூறினார்.

இலங்கை எப்போதும் இப்படி அரசி தட்டுப்பாடும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கோதுமை மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை என்றும் தெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடி என்ற பிரச்சினை மக்களின் வாழ்க்கை தொடர்பான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் கூறினார்.

அதேசமயம் ஒரு புறம் போதைப் பொருள் வியாபாரம் பாரதூரமான அளவில் பெருகி வருகிறது. அந்த வியாபாரத்தை ஒழிக்க அரசாங்கம் வலுவான வேலைத்திட்டத்தை நடைமுறை்படுத்துவதாக தெரியவில்லை என்றும் மைத்திரி இதன்போது சாடினார்.