நாடாளுமன்ற சுற்றாடலில் நேற்றிரவு நடந்த மோதல்களில் 84 பேர் படுகாயம்

நாடாளுமன்ற சூழல் மற்றும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதி ஆகியவற்றில் இடம்பெற்ற மோதல்களில் 84 பேர் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.காயமடைந்தவர்களுள் இராணுவ சிப்பாயொருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் இரு ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
நேற்றிரவு(13) வரையில் பொல்தூவ சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இளைஞர்களை கலைப்பதற்காக பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதேவேளை, பிரதமரை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி
நேற்று(13) கொழும்பு – ஃபிளவர் வீதியிலுள்ள பிரதமரின் செயலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 40 பேர் வரை காயமடைந்தனர்.
Related Post

இனி மின் துண்டிப்பு இல்லை – ஜனாதிபதியின் அறிவிப்பு
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கிணங்க மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மின் விநியோகத்தடையினை [...]

இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து
இன்று (28) காலை 7.30 மணியளவில் பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு [...]

யாழில் இருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை
மிகக்குறுகிய காலத்துக்குள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு இலங்கை, [...]