இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில்

இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தடை காரணமாக இவ்வாறு ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் ஐ.ஓ.சீ நிறுவனத்திடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொண்ட போதிலும், சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகின்றது.
அத்துடன், ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
Related Post

யாழ் மிருசுவிலில் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை
மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் [...]

மட்டு சிறைச்சாலையில் தாக்குதல் – கைதி மரணம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி கைதிகளால் [...]

வீடொன்றினுள் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம்
கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிவிதிகம்மன, ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [...]