யாழில் ஒரே வீட்டில் இரு பெண்களின் சடலம் மீட்பு – பெரும் அதிர்ச்சி

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு சடலங்களும் மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் 76 வயதுடைய எனவும், மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்தாகவும், மற்றொருவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது
Related Post

உலக வங்கியிடம் இருந்து கிடைத்த நற்செய்தி
உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி [...]

அரசுக்கு துணைபோனவர்களை அழிப்போம் – பரபரப்பு சுவரொட்டிகள்
வவுனியாவில் உள்ள வீதிகள், பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அரசுக்கு துணைபோனவர்களை அழிப்போம் எனும் [...]

சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில்
எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக [...]