பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

நேற்றைய தினம் பாராளுமன்ற பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கையளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்திருந்தார்.

பின்னர, நேற்றைய தினம் பாராளுமன்றில் புதிய பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்த நிலையில் அதில் 148 வாக்குகளை பெற்று மீண்டும் பிரதி சபாநாயகராக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.