இலங்கையில் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திடீர் மாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பல உள்நாட்டு
பத்திரிகைகள் சில செய்தி வௌியிட்டுள்ளன.
அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு படையணிக்கு பொறுப்பாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புலனாய்வு மற்றும் கண்காணிப்புக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.ஜயலத் உட்பட 100 பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 4ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதாக பத்திரிகைகள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
Related Post

அதிக மழை – வான் கதவுகள் திறப்பு
மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல [...]

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
இலங்கையில் பதவிக்கு வரும் அனைத்து ஜனாதிபதிகளும் பொதுமன்னிப்பை வழங்கின்ற போதிலும் தமிழ் அரசியல் [...]

80 மில்லிகிராம் ஹெரோயின்உடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது!
இலங்கைக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கட் போட்டியின் [...]