பெற்றோலிய தாங்கிவூர்திகளின் சாரதிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டம்


இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தாங்கிவூர்திகளின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோலிய தாங்கிவூர்திகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் பி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப போக்குவரத்து கட்டண சூத்திரம் திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *