யாழ். கோப்பாயில் வீடு புகுந்து வாள்வெட்டு – குடும்பஸ்த்தர் படுகாயம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 54 வயதான நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் ச.சின்னராசா (வயது54) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த நபருடைய வீட்டிற்குள் நேற்றுமுன்தினம் இரவு புகுந்த 8 பேர் கொண்ட வாள்வெட்டு குழு குறித்த தாக்குதலை நடத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.