றம்புக்கனை – 08 பொலிஸார் உட்பட 24 பேர் காயம்

றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷட் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவிததுள்ளார்.
இவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் படுகாயமடைந்த இருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related Post

கோர விபத்தில் பெண் பலி – உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை
தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் [...]

இலங்கையில் மீண்டும் கொவிட் அபாயம்
நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், நாளாந்தம் குறைந்த எண்ணிக்கையிலான [...]

அம்புலன்ஸ் மோதியதில் 9 வயது சிறுமி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் அம்புலன்ஸ் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட [...]