முல்லைத்தீவில் 14 வயது சிறுவன் விபரீத முடிவெடுத்து உயிரிழப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்துள்ள நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (04.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டார பகுதியினை சேர்ந்த அபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் பெற்றோர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சிறுவன் இவ்வாறான விபரீத முடிவுவெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுவனின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

நியூசிலாந்தில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரையில் இன்று (24) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் [...]

கடலோர காவல்படை அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையில் கைகலப்பு
ஹம்பாந்தோட்டையில் உள்ள இலங்கை கடலோர காவல்படை நிலையத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட [...]

முல்லைத்தீவில் பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் [...]