அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (12ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை பண்டிகை காரணமாக பல தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால், அதற்குப் பதிலாக நவம்பர் 18ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related Post

சமூக வலைத்தளங்களில் வெளியான பரீட்சை வினாத்தாள்
மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் இன்று (01) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை ஆண்டு [...]

4800 அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அணுமதி
நான்காயிரத்து எண்ணூறு (4800) அதிபர் வெற்றிடங்களை நிரப்ப பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் [...]

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கை
பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் [...]