வவுனியா விபத்தில் மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு

வவுனியா – மன்னார் வீதியில் பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் நேற்று (29) இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி ஓரமாக நடந்து சென்றவர் மீது பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மாேதியதில் இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்ற பாேதே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நெளபர் என்பவர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 31 பேர் கைது
முகநூல் வாயிலாக பியகம – பண்டாரவத்தை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் களியாட்ட [...]

யாழில் வன்முறை கும்பல் தாக்குதல் – மூவர் பொலிஸில் சரண்
இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ [...]

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 84 பேர் கைது
மருதானை டீன்ஸ் வீதியில் இன்று சோசலிச இளைஞர் சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது [...]