யாழ் மாவட்டத்தில் பாணின் விலை மேலும் குறைப்பு

யாழ். மாவட்டத்தில் பாணின் விலை மேலும் 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் இருந்து 10 ரூபா விலைக் குறைப்பு நடைமுறைக்குவரும் என அவர் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படாது என ஊடகங்களில்,
வெளியாக செய்திகளை அடுத்து, கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் அதிரடியாக பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
எதிர்காலத்தில் கோதுமை மா, நல்லெண்ணெய் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில், பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்
என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
Related Post

சீமெந்து விலை அதிகரிப்பு
சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் [...]

விமல் வீரவங்சவின் மனைவி விடுதலை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றினால் [...]

மட்டக்களப்பில் பதற்றம் – பெண்களை சரமாரியாக தாக்கிய பொலிஸார்
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட [...]