தேர்தலை நடத்த பணம் கொடுத்த யாழ் இளைஞன்

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (23) கூறினார். இந்நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் எனத் தெரிவித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தை ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்” என எழுதி, தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Related Post

இளைஞர்களை சீண்டாதீர்கள் – பொன்சேகா எச்சரிகை
நாட்டுக்காகவும், ஜனநாயக மறுசீரமைப்புக்காகவும் போராடும் இளைஞர்களை ஒடுக்கும் முயற்சிக்கு பாதுகாப்பு தரப்பினர் துணைபோகக்கூடாது [...]

இன்று பாரிய பணிப்பகிஷ்கரிப்பு
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய (புதன்கிழமை) தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். [...]

தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது
இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் [...]