யாழ். குப்பிளான் பகுதியில் 38 வயதான பெண் கைது

யாழ்.குப்பிளான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குப்பிளான் – தயிலங்கடவைப் பகுதியில் ஹெரோயின் வியாபாரம் செய்த 38 வயதான பெண் ஒருவர்,
சுமார் 130 கிராம் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கைது செய்யப்பட்ட பெண் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் ஆகியன சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

குரங்கம்மை காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என அமெரிக்க [...]

யாழில் திடீரென மயங்கி விழுந்து இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் [...]

மாணவர்களுக்கான சுற்றுலா தொடர்பில் புதிய நடைமுறை
பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்வதற்கான தூர அளவை 100 கிலோமீற்றராக [...]