இலங்கையை ஏழ்மை நாடாக பிரகடனப்படுத்த தயாராகும் அரசாங்கம்

இலங்கையை ஏழ்மை நாடாக பிரகடனம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.
உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் உதவிகளை பெறும் நோக்கிலும், அந்நியச்செலாவணி இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி,
பணவீக்கம், கடனை மீள செலுத்துவதில் உள்ள நெருக்கடி உள்ளிட்ட காரணிகளாலுமே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அமைச்சரவைப் பத்திரத்தில் முழுமையான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது எனவும், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்ற பின்னர்
அது தொடர்பில் உலக வங்கிக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அறியமுடிகின்றது. இலங்கையானது இதுவரையில்
மத்திய வருமானம் பெறும் நாடாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்தது.
Related Post

யாழில் மது போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இ.போ.ச சாரதி கைது
நிறைபோதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இ.போ.ச சாரதி ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது [...]

தொங்கு பாலம் அறுந்து விழுந்து 40 பேர் பலி – பலர் மாயம்
குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான [...]

பொலிஸ் பொறுப்பிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொறுப்பிலிருந்த போது சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான [...]