எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்த சொகுசு வாகனம் – ஒருவர் படுகாயம்


கொழும்பு மடிவேல கோட்டையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த சொகுசு வாகனம் கவனக் குறைவினால் பாரி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோதியதுடன் எரிபொருள் நிரப்பும் பம்பிகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அத்துடன் விபத்தை ஏற்படுத்திய சொகுசு வாகனம் மற்றும் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பம்பிகள் என்பன சேதமடைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *