யாழில் காணாமல் போன 3 வயது சிறுமி காட்டுக்குள்ளிருந்து மீட்பு

மிருசுவில் வடக்கு பகுதியில் இன்று மாலை காணாமல் போன சிறுமி வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள அனைவர் வீடுகளிலும் தேடியுள்ளனர். பின்னர் சிறுமி வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பாதை வழியாக நடந்து அங்குள்ள ஒரு கோயிலை சென்றடைந்துள்ளார். சிறுமியின் கால் அடித்தளத்தினை வைத்து சிறுமி காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுக்குள்ள கோவிலுக்குள் சிறுமி சென்றமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாராவது தூக்கிக் கொண்டு போய் இருக்க சந்தர்ப்பம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Related Post

இலங்கைக்கு செல்லமோட்டோம் – வியட்நாமில் கதறும் இலங்கையர்கள் (காணொளி)
கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த நிலையில், பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் [...]

கொழும்பில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (10) காலை 10 மணி [...]

பேருந்து மோதி வயோதிபர் பலி – சாரதியும், நடத்துனரும் தலைமறைவு
இ.போ.ச பேருந்து மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மன்னார் – மாந்தை [...]