குடும்ப தகராறு – மனைவி மற்றும் மச்சானை கொலை செய்த நபர்

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
அதே நேரத்தில் அவரது மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய ஒருவரும் அவரது 25 வயது சகோதரியும் ஆவர்.
சந்தேக நபர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related Post

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் [...]

அல்லைப்பிட்டி கடலில் மூழ்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி கடலில் குளிக்கச் சென்றிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி [...]

விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 17 வயது மாணவி – பரபரப்பு
சின்னசேலம் அருகே உள்ள தனியார் பாடசாலையின் விடுதியில் தங்கி கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் [...]