நாடடில் மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு


இன்று (18) மற்றும் நாளை (19) வரிசையில் நின்ற போதிலும் பெட்ரோல் வழங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (20) முதல் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிப்பதற்கு 3 நாட்கள் வரை ஆகலாம் என அவர் பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றார்.

பெற்றோல் தட்டுப்பாட்டுக்கான காரணம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் நீண்ட விளக்கமளித்தார்.

எனினும் டீசல் பெறுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *