மஹிந்த ஆதரவு காடையர்களுக்கு வீதி வீதியாக கதறவிட்டு, கும்பிட கும்பிட அடி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவாக நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அலரிமாளிகை முன்பாகவும், காலிமுகத்திடலிலும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய பிரதமருக்கு ஆதரவான காடையர்களை பொதுமக்கள் அடித்து துவைத்து அனுப்பியுள்ளனர்.

கொழும்பு திம்பிரிகஸ்யாய பகுதிக்கு அண்மையில் காடையர்கள் பயணித்த பேருந்து பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களால் துரத்திச் செல்லப்பட்ட காடையர்கள் குழு பேரவெவவில் குதித்து உயிர்ப்பிச்சை கேட்டுள்ளனர்.