அலரிமாளிகைக்கு முன்பாக போராட்டம் – குவியும் விசேட அதிரடிப்படையினர்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

அலரிமாளிகைக்கு முன்பாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு (25) அலரிமாளிகைக்கு முன்பாகவும் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அலரி மாளிகைக்கு முன்பாக மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கையை விடுத்த நிலையில் நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது.

இருப்பினும் அப்பகுதியில் இன்று அதிகாலை முதல் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது