போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் – பாணந்துறையில் பதற்றம்


பாணந்துறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாணந்துறை முச்சக்கர வண்டி சாரதிகள் நேற்று (19) முதல் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி ஆர்ப்பாட்டத்தை கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *