உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

றம்புக்கணை பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவிததுள்ளார்.

இவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் படுகாயமடைந்த இருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.