இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி உயிரிழப்பு


லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.

அதோடு இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது.

தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *