ரணிலுக்கும் அர்ச்சுனாவுக்கு இடையே சந்திப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த சந்திப்பானது இன்றைய தினம்(14.07.2024) இடம்பெறவுள்ளது.
வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
அத்துடன், நேற்றையதினம் (2024.07.13) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ச்சுனா சந்தித்து பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் மக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடத்தில் நேரடியாக எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related Post

கிளிநொச்சியில் புதையல் – அகழ்வுப்பணிகள்
கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று [...]

முல்லைத்தீவில் 17 வயது இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான். [...]

06 மாவட்டங்களைச் சேர்ந்த 7,181 பேர் பாதிப்பு
நாட்டில், வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணகளில் ஆறு மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை [...]