மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் காயம்

வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலபே ராகுல வித்தியாலயத்தில் இருந்து ரண்டம்பே நோக்கி மாணவர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
வரக்காபொல பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

கிளிநொச்சியில் கணவனின் கொடூர தாக்குதல் – மனைவி படுகாயம்
கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் [...]

எரிபொருள் பவுசர், முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி, 06 பேர் வைத்தியசாலையில்
மலையகப் பகுதியில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 06 [...]

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
கொவிட் 19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு, முன்னர் [...]