வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் கூரிய ஆயுதத்தினால் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
![](https://imaifm.com/wp-content/uploads/2022/02/17523056_744511885727353_6418425287146424094_n.jpg)