இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் எச்சரிக்கை


பல பிரதேசங்களில் இன்று (05) இரவு வேளையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *