அரசாங்கத்தின் ஓய்வுதிய திட்டம் – போராட்டம் தீவிரம்

பிரான்ஸில், அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை, 60 இல் இருந்து 62 ஆக உயர்த்துவதற்கு, ப்ரான்ஸ் ஜனாதிபதி, இம்மானுவேல் மெக்ரோன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம் நடுப்பகுதி முதல் பிரான்ஸில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்றைய தினமும் இடம்பெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தின்போது, பாதுகாப்புத் தரப்பினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டது.
இதன்காரணமாக, நாட்டின் முக்கியமான பகுதிகளில், 13 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும், இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, 27 பேர் கைதுசெய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related Post

இளம் கர்ப்பிணி பெண் மீது மோதிய முச்சக்கரவண்டி – பெண் படுகாயம்
புத்தளத்தில் அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் பயணித்த கர்ப்பிணிப் பெண் [...]

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை
சில தரப்பினரின் தவறான வழிநடத்தல் மற்றும் தவரான விளக்கங்களினால், படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் [...]

வரி உயர்வுக்கு எதிர்ப்பு – வன்முறையில் 23 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் நைரோபியில் [...]