களவாடி சென்ற துப்பாக்கிகள் எங்கே? அனுரகுமாரவை நேரடியாக கேட்ட ஜனாதிபதி


இராணுவத்தினரிடமிருந்து திருடிச் சென்ற துப்பாக்கிகள் எங்கே? என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் நேரடியாக கேட்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூடிய சீக்கிரம் அதனை இராணுவத்திடம் ஒப்படைக்கும்படியும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு இடம்பெற்ற அன்று இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அன்றைய தினம் பாராளுமன்றத்திற்குள் செல்லகையில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) அநுகுமார திசாநாயக்க எதிரே வந்துள்ளார்.

அப்போது ‘இரு துப்பாக்கிகளும் எங்கே’ என ஜனாதிபதி ரணில் கேட்டுள்ளார். சிறு சஞ்சலத்துடன் எந்த துப்பாக்கிகள் என இதன்போது அநுர பதிலளித்துள்ளார்.

பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவத்திடமிருந்து களவாடி சென்றீர்களே அந்த துப்பாக்கிகளை தான் கேட்கிறேன் என ஜனாதிபதி ரணில் குறிப்பிடவே,

கேலி செய்யாது எடுத்துச் சென்றவர்களிடம் கேளுங்கள் என அநுர கூறியுள்ளார்.

பரவாயில்லை கூடிய விரைவில் இராணுவத்திடம் ஒப்படைத்து விடுங்கள் என கூறியவாறு ஜனாதிபதி ரணில் அங்கிருந்து சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *