யாழ் ஊர்காவற்துறையில் 11 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – இலகடி பகுதியில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுவன் பொதுக்கிணறு ஒன்றிலேயே விழுந்து உயிரிழந்துள்ளான். அதே பகுதியைச் சேர்ந்த பரமுநாதன் தக்சயன் என்ற 11 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.
மேலும் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததற்கான காரணம் வெளிவரவில்லை.
Related Post

மின் கட்டணம் அதிகரிப்பு குறித்து வெளியான முக்கிய தகவல்
அடுத்த இரு வாரங்களில் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு [...]

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால் 5 மணிநேர மின்வெட்டு
நாட்டைல் நாளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மாற்றமில்லாமல் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு [...]

மட்டக்களப்பில் புகையிரதத்தை மறித்து போராட்டம்
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த [...]