முற்றாக முடங்கப்போகும் இலங்கை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை


எதிர்வரும் 15ஆம் திகதி சுமார் 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முழு நாட்டையும் மூடும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொழில்சார் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கை
நாளைமுதல் முதல் தொடர்ச்சியாக பல தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அதன்படி தொழில் வல்லுநர்கள் சங்கத்தில் உள்ள பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள், 13ஆம் திகதிக்கு பிறகு – அதாவது 9ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் – 13ஆம் திகதிக்கு பிறகு, இந்த 15 துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்களும் மிகத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

15ம் திகதி இந்த நாடு முடங்கும் என தெரிவித்த அவர், அணிவகுத்து நிற்கும் தொழிற்சங்கங்கள் உச்சகட்ட நடவடிக்கைக்கு பேரணியாக செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாக தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹரித அலுத்கே ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *