மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியரை கட்டி வைத்து அடித்த மாணவிகள் (காணொளி)

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தனியார் கல்லூரி விடுதி மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை, மாணவிகள் அடித்து உதைத்து, விடுதியிலேயே கட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீரங்கபட்டனா அருகே கட்டேரி கிராமத்தில், தனியார் கல்லூரி வளாகத்தில் விடுதிக்கு அருகில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்து, தலைமையாசிரியர் சின்மயானந்த மூர்த்தி, வேலை பார்த்து வந்துள்ளார்.
இரவில் விடுதியை மேற்பார்வையிடுவதை வழக்கமாக வைத்திருந்த தலைமை ஆசிரியர், நேற்று இரவு மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாணவியிடம் தலைமை ஆசிரியர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, மற்ற மாணவிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மாணவிகள் ஒன்றுகூடி தலைமையாசிரியரை அடித்து, உதைத்து விடுதியிலேயே கட்டி வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Related Post

பெண் ஒருவர் மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் – 10 வருடங்கள் கடூழிய சிறை
பெண் ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழங்கில் குற்றவாளிகள் இருவருக்கு 10 [...]

யாழ் புத்தூர் கிழக்கில் பன்னிரு திருமுறை முற்றோதல்
யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு தல்லுடை கன்னியர் வைரவர் ஆலயத்தில் பன்னிரு திருமுறை முற்றோதல் [...]

யாழில் பேருந்தில் பயணித்த பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
பேருந்தில் பயணித்த வயோதிப பெண் ஒருவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்த [...]