ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள்

ஜப்பானின் ஹமாமட்சு கடற்கரை நகருக்குச் சொந்தமான கடற்கரையில் கோள வடிவப் பொருள் கரையொதுங்கி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரைக்கு வந்த சில நகரவாசிகள் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட மர்மமான கோளப் பொருளை முதலில் பார்த்தனர்.
அது தொடர்பில் நகர அதிகாரிகள் கடற்கரையை பாதுகாப்பான வலயமாக நியமித்து, காவல்துறை மற்றும் இராணுவத்தை நிலை நிறுத்தினார்கள்.
இது கடலில் வைக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.
எனினும், அதில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஜப்பானிய ஊடகங்கள், கோளப் பொருளின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை X-கதிர்கள் பயன்படுத்தியதாகவும், கோளப் பொருளுக்குள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன.
கோளப் பொருளுக்கு இரண்டு ‘வடிவங்கள்’ இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது இது ஏதோவொன்றுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் பின்னர் தெரிவித்தனர்.
Related Post

மூதூரில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது காடையர் கூட்டம் தாக்குதல்
மூதூர் பிரதேச சுயாதீன ஊடகவியலாளர் என்.எம். புஹாரி நேற்று (21) மாலை மூதூர் [...]

கொழும்பில் பிரபல உணவகத்தின் உணவு பொதியில் புழு
நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை,அதன் அதிகாரிகளுக்கு கொழும்பில் நடத்திய கருத்தரங்கொன்றுக்கு இலங்கையின் [...]

அம்பாறையில் காட்டு யானை தாக்கி குடும்ப பெண் உயிரிழப்பு
காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் [...]