இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்

புத்தள, உனவடுன பிரதேசத்தில் நேற்று (12) சிறிய அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
காலை 8.53 முதல் 8.55 வரையான காலப்பகுதிக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
புத்தளவை சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியதன் பின்னணியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஆனால் நேற்று நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் பேராசிரியர் உதேனி பண்டார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related Post

கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் மனைவி
ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன [...]

மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
இலங்கையில் மீண்டும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்ப்படுள்ளதாக பாதிக்கப்பட்ட [...]

வவுனியாவில் பெண்ணை கடத்தி கப்பம் கேட்ட 4 பேர் கைது
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறுவதற்காக சிறைபிடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவரை பொலிஸார் [...]