நாடளாவிய ரீதியில் மதுபான கடைகளுக்கு பூட்டு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபான கடைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை மறுதினம் (04) நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபான கடைகள் மூடப்படவுள்ளன.