ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சி – இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே


ரயில் பயணங்களை ரத்து செய்து ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், தொழிற்சங்கங்கள் அதற்கு வாய்ப்பளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்..

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே எஸ்.பி.விதானகே இவ்வாறு தெரிவித்தார்.

“ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டதால் ரயில் பயணிகளுக்கு ரயில் பயணங்கள் விரக்தியடைந்து விட்டது. ரயில் ஊழியர்களை விரக்தியடையச் செய்து தற்போது என்ன நடக்கிறது? அமைச்சர் வாயை திறந்தால் ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பது தொடர்பில் குறிப்பிடுகிறார். முடிந்தால் ரயில் அதிகார சபை ஒன்றை நிறுவுங்கள். மறுசீரமைப்பு செய்தால் அதற்கு எதிராக அனைத்து ஊழியர்களையும் திரட்டுவோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *