O/L பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை மே மாதம் நடாத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை ஆரம்பமாகும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பாடநெறி மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சின் அனுமதியின் பேரில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுநோய் காரணமாக பரீட்சை நடவடிக்கைகள் தடைபட்டதன் காரணமாக பரீட்சை அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டது மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர பரீட்சை கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைப்பெற்றிருந்தது.
அதன் பெறுபேறுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
Related Post

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் இடம் பிடித்த மாகாணம்
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணம் [...]

உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. [...]

2,500 ஆங்கில மொழி மூல ஆசிரியர்களுக்கு வெற்றிடம்
ஆங்கில மொழிக்கல்வி மூலம் கற்பிக்கும் 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் [...]