சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற இளைஞர் திடீர் மரணம்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற இளைஞர் ஒருவர், திடீர் சுகயீனமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என நல்லதண்ணிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று திகதி காலை கந்தகெட்டிய பிரதேசத்தில் இருந்து சிலருடன் சிவனொளிபாதமலைக்கு வருகைத் தந்த 23 வயதான குறித்த இளைஞர், அதிகாலை சுகயீனமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், உயிரிழந்துள்ளார்.
கந்தகெட்டிய- மீகஹகிவுல, கரமட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதான கே. எம். ஜனித் காவிந்த இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம்
இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி [...]

6 முதல் 12 ஆம் திகதி வரை மின்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாட்டில் [...]

வைத்தியசாலையில் ஸ்கேன் அறையில் தீ
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக [...]