யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 99 லட்சத்தை சுருட்டிய பெண்


கனடாவுக்கு அனுப்புவதாக கூறி சுமார் 99 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய யாழ்.பண்டத்தரிப்பை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளைச் சேர்ந்த இருவரிடம் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பொறப்பட்ட 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சித்திரை மாதம் இவ்வாறு பணம் பெறப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *